×

ஆபாச மார்பிங் படத்தால் 2 உயிர் பலி கடலூர் மாணவிகளிடம் தொடரும் பாலியல் சீண்டல் தடுக்க வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர். இவரது மகன் பிரேம்குமார். இருவரும் அப்பகுதியில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவர் மீதும் அங்குள்ள காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை பிரேம்குமார் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் தெருவில் வசிக்கும் விக்னேஷ் என்ற இளைஞர் கண்டித்ததால் அவர் இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் பிரேம்குமார் கைது செய்யப்படுவதற்கும் விக்னேஷ் உதவியுள்ளார்.

இந்நிலையில் நீலகண்டன் வீட்டிற்கு ெசன்ற பன்னீர், பிரேம்குமார், வல்லரசு திருமணத்தை நடக்க விட மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். நீலகண்டன் மகள் ராதிகாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்ததை காட்டியுள்ளனர். அத்துடன் விக்னேசை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் அவமானம் அடைந்த ராதிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் விக்னேஷ் அடித்து கொலை செய்யப்பட்டு, அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார். கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அருகேயும், அங்கு செல்லும் சாலைகளில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களை சமூக விரோதிகள் அரங்கேற்றுகின்றனர். யாராவது கண்டித்தால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்து சிறைக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : sealing , Porn mobing, cuddalore, sex scandal, ramadas
× RELATED அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் சீல் வைப்பு