×

பிரதமர் மோடியுடன் கர்நாடகா, அருணாச்சல் ஆளுநர்கள் சந்திப்பு

புதுடெல்லி: கர்நாடகா, அருணாச்சல பிரதேச ஆளுநர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் கர்நாடக அரசு மிகுந்த இறுக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். இதேபோல், அருணாச்சலப் பிரதேச ஆளுநர் பிரிகேடியர் பி.டி.மிஸ்ராவும் பிரதமரை சந்தித்தார். இதேபோல், ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங், குஜராத் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோஹில், கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலா மற்றும் உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா ஆகியோர் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து தங்கள் மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசித்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Karnataka ,Modi ,Arunachal , Prime Minister Modi, Karnataka, Governors
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு