×

பேஸ்புக் போச்சு.. டிவிட்டர் போச்சு இப்போது டிக் டாக் செயலி மூலம் மாணவியை கடத்தி பலாத்காரம்: கறிக்கடை ஊழியர் போக்சோவில் கைது

சென்னை: டிக் டாக் செயலி மூலம் பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கறிக்கடை ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் இந்துமதி (35), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள். இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்துமதியின் கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கடந்த 30ம் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்ற மூத்த மகள் இரவு வரை வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இந்துமதி, மகளுடன் படிக்கும் சக தோழிகளின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார்.

ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சூளைமேடு காவல்நிலையத்தில் மகள் மாயமானதாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அரும்பாக்கத்தில் கறிக்கடையில் ஊழியராக வேலை செய்யும் அரக்கோணத்தை சேர்ந்த அசாருதீன் (20) என்பவருடன் மாணவி சென்றது தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு சூளைமேடு காவல் நிலையத்தில் இருந்து ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பள்ளி மாணவியை கடத்தி சென்று அசாருதீன் அரக்கோணத்தில் குடும்பம் நடத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, போலீசார் அசாருதீனை பிடித்தனர். அவரிடம் இருந்து பள்ளி மாணவியை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
அசாருதீன் டிக் டாக் செயலி மூலம் பள்ளி மாணவிக்கு அறிமுகமாகியுள்ளார். பிறகு அந்த மாணவி வீட்டின் அருகே வசிப்பதை தெரிந்து கொண்ட அசாருதீன், பள்ளிக்கு செல்லும் போது அவரை பின்தொடர்ந்து டிக் டாக் செயலி மூலம் செல்போன் எண்ணை எடுத்து காதலை வளர்த்து வந்துள்ளார். பிறகு இருவரும் வடபழனியில் உள்ள வணிக வளாகத்தில் முதல் முதலில் சந்தித்து உள்ளனர். அப்போது அசாருதீன் தனது காதலை நேரடியாக மாணவியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததால் இருவரும் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்துள்ளனர். மகளின் காதல் குறித்து தாய் இந்துமதிக்கு தெரியவந்தது. உடனே மகளை கடுமையாக கண்டித்து வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று கூறிவிட்டார்.

அதன் பிறகுதான் அசாருதீன் மாணவியை வீட்டை விட்டு வெளியே வர சொல்லி அரக்கோணத்திற்கு அழைத்து சென்று அங்கு 10 நாட்கள் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் தாய் இந்துமதியை பார்க்க வந்த போது, மாணவியின் தாய் அளித்த தகவலின்படி, நாங்கள் அசாருதீனை பிடித்தோம். பள்ளி மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது, உடல் ரீதியாக இருவரும் ஒன்றாக இருந்தது தெரியவந்தது. 18 வயதுக்கு குறைவான மாணவியை ஏமாற்றி திருமணம் செய்வதாக கூறி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த அசாருதீனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : tick-doc processor , Facebook has gone .. Twitter has gone, now tick dog, student, kidnapped
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...