கூடலூர்: பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் விசாடிக்கு 163 கனஅடியாக இருந்தது. தொடர் மழை காரணமாக நேற்று காலை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 325 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, நேற்று காலை முதல் விநாடிக்கு 70 கனஅடியில் 100 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.15 அடியாக உள்ளது.