×

அமெரிக்க வாழ் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

சென்னை: அமெரிக்க வாழ் இந்தியர்களான சந்திரசேகர், இவரது மனைவி சந்திரா (65) ஆகியோர், கடந்த 3ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சுரங்கப்பாதை வழியாக சென்றனர். அப்ேபாது, சந்திரா அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை மர்ம நபர் பறித்து தப்பினார். விசாரணையில், பெரியமேடு ஹாடம்ஸ் சாலையை சேர்ந்த முனியன் (30) என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

* புளியந்தோப்பு பகுதியில் மாவா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை விற்ற சூளையை சேர்ந்த கிருஷ்ணவேணி (47), ேக.எம்.கார்டனை சேர்ந்த துரை (59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  
* ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த விசிக பிரமுகர் தனசேகரன் (45) என்பவரை, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தாக்கிய அதே பகுதியை சேர்ந்த சூரியகுமார் (40), அவரது சகோதரர்களான கலைசெல்வன் (35), செல்வபெருமாள் (30), சூரிய கதிரவன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* திருவொற்றியூர் சாத்தாங்காடு ஜோதி நகரை சேர்ந்த ஜெயராஜ் சூசை (27) என்பவரை முன்விரோத தகராறில் தாக்கிய ஜோதி நகரை சேர்ந்த ரமேஷ் (19), அரவிந்த் (19), மணிகண்டன் (20), ஹாட்லி பெர்னாண்டோ (18), மணிகண்டன் (19) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
* திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்த மீனா (36) என்பவரை தாக்கி, 21 சவரன் நகையை பறித்து சென்ற கலைஞர் நகரை சேர்ந்த டில்லிபாபு (22), சூர்யா (20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
* தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த குப்பு (எ) குப்பம்மாள் (60), சொக்கம்மாள் (62), நீலாவதி (40), மீனா (எ) சாதிக் (58) (திருநங்கை) மற்றும் தண்டையார்பேட்டையை சேர்ந்த சுஜித்ரா (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* ஆவடி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ஓய்வு  பெற்ற மத்திய அரசு ஊழியர் தங்கராசு (65) என்பவரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிய பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் (31) மற்றும் ராமு (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* போரூர் அடுத்த காரம்பாக்கம் மூர்த்தி நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் நாகலட்சுமி (85) என்பவர் நடைபயிற்சி சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், நாகலட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
* நன்மங்கலம், நேரு நகர், 1வது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (50) என்பவர் நேற்று எஸ்.கொளத்தூர் மெயின் சாலை வழியாக சென்றபோது கழிவுநீர் லாரி மோதி இறந்தார்.

Tags : American ,jewelery , Robbed jewelry, arrested
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...