×

அண்ணாநகரில் பரபரப்பு ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு : 2 பேர் கைது

அண்ணாநகர்: ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த வாலிபரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர் அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பரசு (25), பிளம்பர். இவர், நேற்று முன்தினம் இரவு அண்ணாநகரில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உள்ளே நுழைந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர், அன்பரசுவை கத்தி முனையில் மிரட்டி, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து தரும்படி கூறினர்.

அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆசாமிகள், அன்பரசுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். அன்பரசு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அன்பரசுவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர். அதில், அரும்பாக்கம் என்.எஸ்.கே நகரை சேர்ந்த வினோத் (எ) மாடு வினோத் (24), லோகேஷ் (23) ஆகிய இருவர் அன்பரசுவை வெட்டியது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர்.



Tags : men ,sinek cancellation ,ATM , cancellation for young men , money at ATM
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்