கோவையில் வரதட்சணை கொடுமையால் ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளி விட்டு கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் மனைவியை கணவனே காரில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.