ஆரணி: ஆரணி மக்களவைத் தொகுதியில் கூட்டணிக்கட்சிகள் ஒத்துழைக்காததால் அதிமுக தோல்வி அடைந்துள்ளது என எம்.எல்.ஏ. தூசி மோகன் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார். அதிமுக உறப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்றது. விழாவில் பேசிய செய்யாறு அதிமுக எம்.எல்.ஏ. தூசி மோகன் கூட்டணிக்கட்சிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.