சென்னை: புதிய கல்விக்கொள்கை பற்றி விரிவாக விவாதிக்க 6 மாதங்கள் அவகாசம் தேவை என்று கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். புதிய கல்விக் கொள்கை கூட்டாட்சி தத்துவத்துக்கும், சமூக நீதி சட்டத்துக்கும் எதிராக உள்ளதாக கி.வீரமணி அறிக்கை அளித்துள்ளார். தொடக்க கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை மாற்றங்களை புகுத்த புதிய கல்வி கொள்கை ஆயத்தமாகி உள்ளது எனவும் கூறினார். ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஆங்கில சொற்களால் ஒப்பணை செய்து 484 பக்கங்களில் கல்வி கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.