காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜரானார். வேங்கடமலத்தில் நடிகர் சங்க நிலத்தை சரத்குமார், ராதாரவி விற்றது தொடர்பான வழக்கில் விஷால் ஆஜரானார். நிலத்தை முறைகேடாக விற்றதாக சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் விஷால் புகார் தெரிவித்திருந்தார்.