சென்னை: சிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு அடுத்த வாரம் விளக்கம் தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.