×

நெய்வேலி அருகே முகநூலில் அவதூறு செய்தி வெளியிட்டதால் பெண் தற்கொலை

கடலூர்: நெய்வேலி அருகே இளம்பெண் தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்ய கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டபோது மர்மநபர்கள் கல் வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெய்வேலியை அடுத்த குறவன்குப்பத்தை சேர்ந்த நீலகண்டன் என்பவரது மகளுக்கு அதே ஊரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் முகநூலில் ஆபாசமாக பதிவிட்டு செய்தி  அனுப்பியுள்ளார்.  இதனால் மனமுடைந்த அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி அறிந்த இளம்பெண்ணின் காதலரும் உயிரை மாய்த்து கொண்டார். காதலர்கள் தற்கொலைக்கு காரணமாக இருந்த பிரேம்குமாரை கைது செய்ய கோரி உறவினர்கள் கடலூர் விருத்தாச்சலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் காயமடைந்தனர். மேலும் தாக்குதலில் கிருஷ்ணன் என்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மண்டை உடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தலைமறைவாக உள்ள பிரேம்குமாரை தீவிரமாக தேடி வரும் காவல்துறையினர் கல்வீச்சு நடத்தியவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Tags : suicide ,town ,Neyveli , Cuddalore, Neyveli, Facebook, Swamy news, release girl, suicide
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...