×

குப்பை லாரியில் டீசல் திருடிய மாநகராட்சி டிரைவர் கைது

சென்னை: மாநகராட்சி குப்பை லாரியில் டீசல் திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். சென்னை வேப்பேரி ஜோதி வெங்கடாசலம் சாலையில்  உள்ள மசூதி அருகே ேநற்று முன்தினம் அதிகாலை மாநகராட்சி குப்பை லாரி மூலம், ஒப்பந்த ஊழியர்கள் குப்பையை அள்ளி கொண்டிருந்தனர். அப்போது வேப்பேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலையின் இடையே குப்பை லாரி நின்று இருந்ததால் டிரைவரை பார்த்து, வாகனத்தை எடுக்க போலீசார் முயற்சி செய்தனர்.

அப்போது, குப்பை லாரியின் எரிபொருள் டேங்க்கில் இருந்து டிரைவர் டீசலை திருடுவது தெரிந்தது. இதை பார்த்த போலீசார், குப்பை லாரி டிரைவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், வியாசர்பாடி சர்மா நகர் 24வது தெருவை சேர்ந்த குபேந்திரன் (40) என்பதும், இவர் ெசன்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் குப்பை லாரி ஓட்டி வந்ததும் தெரியவந்தது. மேலும், பணியில் ேசர்ந்த நாள் முதல் தொடர்ந்து டீசல் திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.

Tags : corporation , Stolen diesel ,garbage truck
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...