×

இஸ்‌ரேலில் இந்தியர் குத்தி படுகொலை

டெல் அவிவ்: இஸ்‌ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் இந்தியர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். டெல் அவிவ்வில் உள்ள நேவ் ஷானன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல இந்திய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் ஒரு வீட்டில் கேரளாவை சேர்ந்த ஜெரோம் ஆர்தர் பிலிப் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் குடியிருப்போரிடையே ஏற்பட்ட தகராறு ஒன்றில் ஜெரோமை, அக்குடியிருப்பிலேயே வசித்த வேறு சில இந்தியர்கள் கத்தியால் குத்தினர். இதை தட்டிக்கேட்ட கேரளாவை சேர்ந்த அவரது நண்பர் பீட்டர் சேவியரையும் அவர்கள் தாக்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தி குத்துப்பட்ட ஜெரோம், பீட்டரை அருகில் உள்ள இச்சிலோவ் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஜெரோம் சிகிச்சை பலனின்றி இறந்தார். பீட்டரின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கத்திக்குத்து தொடர்பாக அதே குடியிருப்பில் வசித்து வரும் இரண்டு இந்தியர்களை கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Indian ,Israel , Indian massacre ,Israel
× RELATED சோமாலிய கடற்கொள்ளையர்களின் சதி இந்திய கடற்படை முறியடிப்பு