×

ஜார்க்கண்டில் கோர விபத்து லாரி மீது பஸ் மோதி 11 பேர் பரிதாப சாவு

ஹசாரிபாக்: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவின் மசோவ்ரி நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்திற்கு உட்பட்ட சோபரன் நகரின் தனுவா-பனுவா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இரும்பு கம்பி லோடு ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் பஸ் எதிர்பாரத விதமாக மோதியது.

இதில், பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கி, ஒரு குழந்தை உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். 22 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு பாட்னா, ஹசாரிபாக் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர்தாஸ் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : bus accident ,Jharkhand , accident ,Jharkhand, bus collided with lorry, killing 11 people
× RELATED ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு