மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆதரவாளர்களுடன் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று ராஜன் செல்லப்பா கருத்து கூறியிருந்தார். கட்சி நிர்வாகிகள் யாரும் கருத்து கூறக்கூடாது என அதிமுக தலைமை கட்டுப்பாடு விதித்திருந்தது. கட்சி தலைமை கட்டுப்பாடு விதித்த நிலையில் ராஜன் செல்லப்பா ஆலோசனையால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.