நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் 750க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.