லண்டன்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்துவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வைலதளங்களில் வைரலாகி வருகிறது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணிக்கு ரோகித் சர்மா - ஷிகர் தவான் நிதானமாக விளையாடி ரன் குவித்து வந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாததால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவை பந்து வீச அழைத்தார்.
ஆனால் அவர் பந்துவீச தொடங்கியது முதல் தனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு துலாவிக்கொண்டே இருந்தார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆடம் ஜம்பா அடிக்கடி கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்ததால் அவர் பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.