×

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) இரண்டாம் தாள் இன்று தொடங்கியது - 4.28 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு (TET) இரண்டாம் தாளானது தமிழகம் முழுவதும் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆசிரியர் தகுதி தேர்வானது தமிழகம் முழுவதும் 1081 மையங்களில் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தேர்வானது தொடங்க உள்ளது. காலை 9 மணி முதலே தேர்வு எழுத உள்ள ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து விட்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுமார் 4.28 லட்சம் பேர் இந்த ஆசிரியர் தகுதி தேர்வினை எழுதுகின்றனர். நேற்றைய தினம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில் 1.83 லட்சம் பேர் எழுதி இருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வு 10 மணிக்கு தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு எழுத உள்ள ஆசிரியர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 471 மையங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில் இன்று 1081 மையங்களில் நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வானது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் இன்று தேர்வு நடைபெறுகிறது. தகுதி தேர்வு இரண்டாம் தாளானது 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது. நேற்றைய தினம் நடந்த முதல் தாளானது 5ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கானது. இந்த தேர்விற்காக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வானது கண்காணிக்கப்படுகிறது. இந்த தேர்வினை சரியான முறையில் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வு துறை தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.

Tags : Teacher Eligibility Test ,TET ,participants , Teacher Eligibility Test, teacher
× RELATED ஆசிரியர் தகுதி தேர்விற்கு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க கோரிக்கை