சென்னை: சென்னையை அடுத்த புழல் ஏரி முற்றிலும் வறண்டதால் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை புழலில் இருந்து 6 கன அடி தண்ணீர் உறிஞ்சப்பட்டு வந்த நிலையில் ஏரி முற்றிலும் வறண்டதால் பணி நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் ஏற்கனவே வறண்ட நிலையில் புழல் ஏரியும் வறண்டது. புழலில் இருந்து சென்னைக்கு ஓரளவு குடிநீர் விநியோகிக்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் தடைபடும் சூழல் உருவாகி உள்ளது.