×

அனகாபுத்தூரில் நீட் தேர்வில் வென்ற மாணவிக்கு நிதியுதவி: தமிழிசை வழங்கினார்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் வசிக்கும் தையல் தொழிலாளி பன்னீர்செல்வத்தின் மகள் ஜீவிதா. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து, தற்போது நடந்த நீட் தேர்வில் 605 மதிப்பெண்களுடன் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. அவரது மருத்துவ படிப்புக்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்பதாக தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை அனகாபுத்தூரில் உள்ள மாணவியின் வீட்டுக்கு நேரில் வந்த தமிழிசை சவுந்தரராஜன், மாணவி ஜீவிதாவை பாராட்டி, அவரது மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட நிதியுதவியாக ரூ.50 ஆயிரத்தை வழங்கினார்.

Tags : student ,Anakaputhur ,Tamilnadu , Tamilisai
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...