×

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற திண்டுக்கல் வாலிபர் கைது

மீனம்பாக்கம்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணிக்கு பாட்ரிக் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டியன் (30) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அது போலி பாஸ்போர்ட் என தெரியவந்தது. விசாரணையில், அவர் ஏஜென்ட் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்று மலேசியா சென்று அங்கு வேலை செய்துவிட்டு சென்னை திரும்பிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, குடியுரிமை அதிகாரிகள் அவரை கைது செய்து, சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஜெபஸ்டீனிடம் விசாரிக்கின்றனர்.

Tags : diplomat , Arrested
× RELATED ஆஸ்திரியா நாட்டில் ரூ.15 லட்சம் வாடகை...