×

விமானத்தில் சிகரெட் பிடித்தவர் கைது

சென்னை: தோஹாவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்தது. விமானம் நடுவானில் பறந்தபோது, வேலூரை சேர்ந்த பாலாஜி (58) என்பவர் தனது இருக்கையில் அமர்ந்தபடி சிகரெட் புகைத்தார். இது விமான பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு எதிரானதாகும். பணிப்பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, பாலாஜி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. விமானம் தரை இறங்கியதும், புகாரின் பேரில் விமான நிலைய போலீசார், பாலாஜியை கைது செய்தனர்.

Tags : Arrested
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...