×

பஸ்சை வழிமறித்து நக்சலைட்கள் தீவைப்பு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் பஸ்சை வழிமறித்து பயணிகளை இறக்கவிட்டு, நக்சலைட்கள் அதற்கு தீ வைத்தனர். சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் நகரில் இருந்து பெட்ரே பகுதிக்கு நேற்று முன்தினம் மாலை ஜெய்பவானி என்ற தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் குட்ரு - பர்சேகார் கிராமங்கள் இடையே சென்றபோது, அங்கு வந்த 12க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் கையில் பயங்கர ஆயுதங்களை காட்டி பஸ்சை நிறுத்தினர். பின்னர் அதில் இருந்த பயணிகளை கீழே இறங்கும்படி கூறிய அவர்கள், பயணிகள் இறங்கியதும் பஸ்சுக்கு தீ வைத்தனர். இதில் தீ கொளுந்துவிட்டு எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர், நக்சலைட்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Nasalis ,firefighting , Naxalites, fire deposits
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணைய...