கடலூர்: கடலூர் அருகே ரெட்டைக்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிஷா, அகமது ஷெரீப், அசீமா பானு ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.