×

கேரள வாலிபர் கொலை சென்னையில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது

சென்னை: கோவையில் கேரள வாலிபரை கொலை செய்துவிட்டு சென்னையில் பதுங்கி இருந்த வாலிபரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். சென்னையில் இரவு நேரங்களில் குற்றங்களை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் தீவிர ரோந்து பணிகள் மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருவல்லிக்கேணி போலீசார் நேற்று முன்தினம் இரவு தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவல்லிக்கேணி ஆடம்ஸ் சாலையில் நேற்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் சுற்றி வந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கவியரசு, அந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்த முயன்றார். ஆனால் வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விருதுநகர் மாவட்டம் கட்டனூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுல்தான் அலாவூதீன் (21) என்பதும், இவர், கடந்த மாதம் 17ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கஞ்சி (எ) விஜயகுமார் என்பவரை கோவை வரைட்டி ஹால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என தெரியவந்தது. இதை தொடர்ந்து, திருவல்லிக்கேணி போலீசார் சம்பவம் குறித்து கோவையில் உள்ள வரைட்டி ஹால் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி கோவை போலீசார் குற்றவாளியை அழைத்து செல்ல சென்னை வருகின்றனர்.

Tags : Kerala ,chief minister ,Chennai , Arrested
× RELATED கடந்த 10 வருடங்களில் எத்தனை...