×

கோயம்பேட்டில் பரபரப்பு: மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளி மாணவன் தற்கொலை

அண்ணாநகர்: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (45). இவரது மகன் ஸ்ரீவந்த் அருண் (17). சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வந்த் அருண் வீட்டிற்கு செல்வதற்காக மெட்ரோ ரயிலில் கோயம்பேடு வந்தார். ரயில் நிலையத்தில் இருந்து கீழே இறங்கி வந்த ஸ்ரீவந்த் அருண் திடீரென அருகில் இருந்த படிக்கட்டு வழியாக மேலே ஏறி சென்று, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதை பார்த்த மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் அலறியபடி கீழே ஓடி வந்து படுகாயமடைந்த மாணவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ராஜகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில் நிலையத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Coimbatore ,bus accident ,School student suicide ,Metro station , Suicide
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...