×

நல்லூர் சுங்கச்சாவடி முதல் பஞ்செட்டி வரை சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கனரக லாரிகளால் அடிக்கடி விபத்து

புழல்: சோழவரம் ஒன்றியம் நல்லூர் சுங்கச்சாவடி ஜிஎன்டி சாலையில் இருந்து விஜயநல்லூர், சோழவரம் புறவழிச்சாலை மற்றும் பைபாஸ் சாலை, சோழவரம் பஜார், காரனோடை பஜார், ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலை, அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, பஞ்செட்டி ஜிஎன்டி சாலை வரை சுமார் 10 கிமீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கனரக லாரிகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், இவ்வழியே செல்லும் வாகனங்கள் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். மேற்கண்ட இந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் வழிப்பறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் பாலியல் தொல்லைகளும் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட சோழவரம் மற்றும் கவரைப்பேட்டை காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் லாரிகளை உடனே அகற்றிடவும், மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்குகளை எரிய வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : road ,Panchetti ,Nallur Tsangkavadi , Accident
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி