×

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: 11ம் தேதி நடக்கிறது

சென்னை: வியாசர்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 11ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வியாசர்பாடி கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், வருகிற 11ம் தேதி காலை 10.30 மணியளவில் 110/33 கி.வோ. வியாசர்பாடி துணை மின் நிலைய வளாகத்தில் (ராமலிங்கர் கோயில் எதிரில்) அமைந்துள்ள செயற்பொறியாளர், இயக்கம் மற்றும் பராமரித்தல், வியாசர்பாடி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வியாசர்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Electricity consumers , Lack meeting
× RELATED மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி...