×

உ.பி.யில் புழுதி புயல், மின்னல் தாக்கி 25 பேர் பலி: 48 பேர் படுகாயம்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் பல்வேறு  மாவட்டங்களில்  இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. புழுதிப்  புயலும் வீசியது. இதனால்,  அந்த பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சுவர்கள் இடிந்தன. பல இடங்களில் மின்னல் தாக்கியது. இதில், 25 பேர் பலியாகினர். மணிபூரில் அதிகப்பட்சமாக மின்னல் தாக்கி 6 பேர் இறந்தனர். மேலும், இந்த சம்பவங்களில் 48 பேர் காயம்  அடைந்துள்ளனர். கால்நடைகளும் பெருமளவில் இறந்துள்ளன. நிவாரண பணிகளை விரைந்து செய்ய முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்.



Tags : Uttar Pradesh, dust storm, lightning, 25 dead and 48 injured
× RELATED உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்