×

மழையால் ஆட்டம் ரத்து பாகிஸ்தான், இலங்கைக்கு தலா 1 புள்ளி

பிரிஸ்டல்: பாகிஸ்தான் - இலங்கை அணிகளிடையே நடக்க இருந்த உலக கோப்பை லீக் ஆட்டம், கனமழை காரணமாக கைவிடப்பட்டதை தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக இருந்தே தூறலுடன் தொடங்கி பின்னர் கனமழையாக கொட்டத் தொடங்கியதால் டாஸ் கூட போடப்படவில்லை. குறைந்தபட்சம் தலா 20 ஓவர் கொண்ட போட்டியாவது நடக்காதா என்று ரசிகர்கள் குடைகளை பிடித்தபடி காத்திருந்தனர். ஆனால், மழை நிற்காமல் தொடந்து பெய்ததை அடுத்து போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டதை அடுத்து புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 3வது இடத்துக்கும், பாகிஸ்தான் அணி 4வது இடத்துக்கும் முன்னேறின. உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி மழையின் தயவால் முதல் முறையாக தோல்வியை தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Pakistan ,Sri Lanka , Pakistan, Sri Lanka
× RELATED பா.ஜவின் தேர்தல் அலப்பறைகள் கச்சத்தீவு போனது.. பாகிஸ்தான் வந்தது..