கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வரட்டனபள்ளியில் பெட்ரோலிய குழாய் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதில், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால் வீதிக்கு வரும் நிலை ஏற்படும் என விவாசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூன் 10ம் தேதிக்குள் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.