சென்னை: நாங்கள் விமர்சித்தால் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தாங்கமாட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக-வை விமர்சனம் செய்வதை குருமூர்த்தி நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். மேலும் குருமூர்த்தி காழ்புணர்ச்சியோடு ஏன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை என விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர் என்றும், தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல எனவும் கூறியுள்ளார்.