×

துணைவேந்தர் சூரப்பா மீது தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பா மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தரமில்லாத 92 பொறியியல் கல்லூரி பெயர்களை வெளியிட அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, அண்ணா பல்கலை. துணைவேந்தர், பதிவாளரிடம் லஞ்சம் ஒழிப்பு போலீசார் விசாரிக்க தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும் தரமில்லாத 92 பொறியியல் கல்லூரி பெயர்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Surappa ,Collegiate Collegiate Collegium , Vice-Chancellor Surappa, Vigilance Department, College staff association, complaint
× RELATED தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு...