சென்னை : அரசு நீட் பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசின் 413 நீட் மையங்களில் பயின்று தேர்ச்சி பெற்ற 2000 பேருக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு 1,333 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 2,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5634 பேர் நீட் தேர்வில் 400 மதிப்பெண்ணுக்கு கூடுதலாக பெற்றுள்ளனர்.