திருச்சி : திருச்சி உய்யகொண்டான் ஆற்றங்கரையில் கட்டப்பட்ட தனியார் பள்ளி கட்டடத்திற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட பள்ளி கட்டத்தின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. உரிய அவகாசம் அளித்தும் அளித்தும் பள்ளி நிர்வாகம் அனுமதி பெறாததால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.