×

செயின் பறிப்பை தடுத்தபோது கொள்ளையர்கள் பைக்கில் இருந்து கீழே தள்ளியதில் தம்பதி படுகாயம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (42). அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனா (36). இவர்கள் இருவரும் நேற்று காலை, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, எண்ணூர் கடற்கரை சாலையில் கே.வி.கே. குப்பம் அருகே சென்றபோது, மற்றொரு பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 வாலிபர்கள், மீனாவின் கழுத்தில் கிடந்த 21 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட மீனா, கொள்ளையன் கையோடு நகைகளை சேர்த்து பிடித்துக் கொண்டார். இதனால், கொள்ளையர்கள் ஆத்திரமடைந்து கணவன், மனைவி இருவரையும் பைக்கிலிருந்து கீழே  தள்ளிவிட்டு தப்பி சென்று விட்டனர். சாலையில் விழுந்த தம்பதி, பலத்த காயமடைந்து அலறி துடித்தனர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள், இருவரையும் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து எண்ணூர் விரைவு சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
 
திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில்  சித்ரா என்ற பெண்ணிடம் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால், முடியாததால் ஆத்திரத்தில் அவரை கீழே தள்ளிவிட்டு  கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து இதுபோல் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதால் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில்  பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு சம்பவம்: சென்னை சாத்தான்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜஸ்ரீ (38). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், ேநற்று முன்தினம் இரவு பணி முடிந்து, தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். திருவல்லிக்கேணி அருகே உள்ள முத்துசாமி மேம்பாலத்தில் சென்றபோது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர், ராஜஸ்ரீ கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்தனர். அவர் சுதாரித்துக்ெகாண்டு செயினை பிடித்துக்கொண்டார். இதனால், அவரை கீழே தள்ளிவிட்டு, கையில் கிடைத்த  3 சவரன் மதிப்புள்ள செயினுடன் ஆசாமிகள் தப்பினர். கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ராஜஸ்ரீ திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ைபக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags : pirates , Robbers, couple, and injuries
× RELATED புரோ கபடி லீக் தொடர் பைனலில் புனேரி பல்தான்