×

நாணல் காட்டுக்கு வைத்த தீயால் பனை மரங்கள் எரிந்து கருகியது

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பரப்பனாமேடு கிராமம் பாமணியாறு கிழக்குப்பகுதி ஆற்றங்கரையில் ஏராளமான பனை மரங்கள் நன்கு வளர்ந்து உள்ளது.  நேற்று மதியம் சமூக விரோதிகள் யாரோஅங்கு ஆற்றிலுள்ள நாணல் காட்டுக்கு தீ வைத்துள்ளனர். அந்த தீ மள மளவென பரவி அருகில் கரையில் உள்ள பனை மரங்களில் தீப்பிடிக்கத் தொடங்கியது மரங்கள் பலத்த சத்தத்துடன் எரிந்ததால் அங்குள்ளவர்கள நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் ஏராளமான பனைமரங்கள்

தீயில் கருகின.
இதனால் பரப்பனாமேடு பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீ விபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டது. மேலும் பரப்பனாமேடு, நீடாமங்கலம், ஒரத்தூர் பகுதியில் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

Tags : Roe, fire, palm trees, burned
× RELATED கோடை காலத்தையொட்டி மோர் விற்பனை 25% அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்