×

ஈரோடு மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

ஈரோடு: ஈரோடு அருகே கருங்கல்பாளையம்  காவிரிக்கரை செக்போஸ்ட் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை  நடைபெற்று வருகிறது. இன்று நடந்த மாட்டுச்சந்தைக்கு  350 பசுமாடுகளும்,  200 எருமை மாடுகளும், 150 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்கு வந்தது.  இதில்  பசுமாடுகள் 16 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 18  ஆயிரம் முதல் 34 ஆயிரம் ரூபாய் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் 2 ஆயிரம்  முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது.

மாடுகளில் 80 சதவீதம் 2  கோடி ரூபாய் அளவிற்கு விற்பனையானது. வழக்கமாக ரூ.3 கோடி முதல் ரூ.3.50  கோடி வரை விற்பனை இருக்கும். ஆனால் இன்று நடந்த மாட்டுச்சந்தைக்கு மாடுகள்  வரத்து குறைந்துள்ள நிலையில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம்  பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்துள்ளது.’ என்றார்.

Tags : Erode, the cow
× RELATED சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு...