சென்னை : திருவள்ளூரில் சட்டவிரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சி எடுப்பதை தடுத்து நிறுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காட்டுப்பாக்கத்தில் தேவராஜ் என்பவர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதாக ஷீலா தேவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியன் பிரசாத் ஆகியோர், நிலத்தடிநீரை உறிஞ்சி எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.