தஞ்சை: தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆனந்தபாபு என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் திறந்து விடுமபோது மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதிலில் குமார் என்பவர் தாக்கியதில் ஆனந்தபாபு உயிரிழந்துள்ளார். 250 லிட்டர் கேன்களில் தண்ணீர் பிடித்ததை தட்டிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஆனந்தபாபு கொலை செய்யப்பட்டுள்ளார்.