×

கொடைக்கானலில் நாய் கண்காட்சி: செல்பி எடுத்து மகிழ்ச்சி

கொடைக்கானல்: கொடைக்கானில் நடந்த நாய்கள் கண்காட்சியில் பல்வேறு இன நாய்கள் பங்கேற்று திறமையை நிரூபித்தது. நாயின் உரிமையாளர்கள்  செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் கலை  நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பிரையண்ட் பூங்காவில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், நாய்கள்  கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் சைபீரியன் ஹஸ்கி, கிரேட்டேன், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட், பாக்சர், பொமரேனியன் மற்றும் பீகில்ஸ்  உள்பட 12 ரகங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

இதில் வயது, திறமை, மோப்ப சக்தி, கீழ்படிதல் போன்றவற்றின் அடிப்படையில் ஆறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில்  முதல் 3 பரிசுகளும் மற்றும் சிறப்பு பரிசுகளும், ஒட்டுமொத்த சாம்பியன் பரிசும் வழங்கப்பட்டன. நாய்களுடன் அதன் உரிமையாளர்கள் செல்பி  எடுத்துக்கொண்டனர். கொஞ்சி மகிழ்ந்து ரசித்தனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கொடைக்கானலை சேர்ந்த இசைத்தமிழ் சிங்காரம்  என்பவரின் ‘சைபீரியன் ஹஸ்கி’ ரக நாய் பெற்றது.

Tags : Dog Exhibition ,Kodaikanal , Kodaikanal, Dog Exhibition, Selby
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...