×

விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு தடை கோரி வழக்கு

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில்,‘  விழுப்புரத்தில் இருந்து நாகை வரை 56 கி.மீ.க்கு 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். கூடுதல் விவரம் தாக்கல் செய்வதாக மனுதாரர் கூறியதையடுத்து விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags : Villupuram-Nagai, national highway, proposal, prohibition, prosecution
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...