சென்னை: அடையாறு, பெரம்பூர் கோட்டத்தில் நாளை, நாளை மறுதினம் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது, என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (6ம் தேதி) காலை 10.30 மணிக்கு அடையாறு செயற்பொறியாளர் அலுவலகம், 1வது தளம், 110 கி.வோ, தரமணி துணைமின் நிலைய வளாகம், அடையாறு, சென்னை என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
இதேபோல், பெரம்பூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (7ம் தேதி) காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர் இயக்கம் மற்றும் பராமரித்தல் அலுவலகம், செம்பியம் துணை மின்நிலையம், மின்வாரியம் சாலை (மூலக்கடை அருகில்), என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.