சென்னை; சென்னையில் மதுபோதையில் சாலையோரம் மயங்கி கிடப்பவர்களின் உடல் உறுப்பை துண்டிக்கும் சைக்கோ கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 25-ம் தேதி மாதவரம் தனியார் மருத்துவமனை அருகே மயங்கி கிடந்த அஸ்லாம் என்பவரின் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டது. மதுபோதையில் கிடந்த நாராயணன் என்பவரின் உடல் உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.