சென்னை: சென்னையில் உயர்நீதிமன்றம் அருகே அப்துல் ரஷீத் என்பவரிடம் ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ரஷீத்திடம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஒடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.