லக்னோ : உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். தனித்துப் போட்டியிட்டாலும் அகிலேஷ் உடனான நட்பு தொடரும் என்று கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்ட நிலையில், மாயாவதி திடீர் முடிவு எடுத்துள்ளார்.