×

அண்ணாநகர் மேற்கு பகுதியில் சூப்பர்மார்க்கெட் சூறை: ரவுடிகள் அட்டகாசம்

அண்ணாநகர்: அண்ணாநகர் மேற்கு, 18வது மெயின் ரோட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் செந்தில்முருகன் (42). இவர் நேற்று திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  எனது சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும்  பெண் ஊழியரை காதலிக்கும்படி  ரஞ்சித் என்ற வாலிபர் தொல்லை கொடுத்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த ரஞ்சித், அந்த பெண் ஊழியரிடம், தன்னை  காதலிக்கும்படி கூறியுள்ளார். அவர் மறுத்ததால், ரஞ்சித் ரகளையில் ஈடுபட்டார்.

இதை தட்டிக்கேட்ட மேலாளர் கார்த்திக் என்பவரையும் தாக்கினார். பின்னர், ரஞ்சித் செல்போனில் தொடர்புகொண்டு 25 ரவுடிகளை வரவழைத்து, சூப்பர் மார்கெட்டை சூறையாடி, கல்லா பெட்டியில் இருந்த ₹54 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு  தப்பினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார். ஆனால், புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.



Tags : Anna Nagar , Annanagar, Supermarket, swoosh, Roundabout
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...