×

கதுவா வழக்கில் 10ம் தேதி தீர்ப்பு?

ஜம்மு: காஷ்மீரில் கடந்தாண்டு ஜனவரியில் 8 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கதுவா கிராமத்தில் உள்ள கோயிலில் மயக்க நிலையில் 4 நாட்கள் சிறை வைக்கப்பட்டார். பின் அவரை சிலர் கூட்டு பலாத்காரம் செய்து அடித்து கொன்றனர். இந்த பலாத்கார கொலை தொடர்பாக, கிராம தலைவர் சஞ்சி ராம், அவரது மகன் விஷால், ஆதாரங்களை அழித்த தலைமை காவலர் திலக் ராஜ், எஸ்.ஐ ஆனந்த் தத்தா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை வக்கீல்கள் சிலர் தடுத்ததால், இந்த வழக்கு ஜம்முவில் இருந்து பதன்கோட் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் விசாரணை நடந்து வந்தது. வரும் 10ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kathua , Kathua, on the case, on 10th,verdict?
× RELATED காஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் ரவுடி, போலீஸ் பலி