×

கோவை கோர்ட்டில் பெங்களூர் குண்டுவெடிப்பு கைதி ஆஜர்

கோவை: பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவை உக்கடத்தை சேர்ந்த அஸ்கர் அலி (34) கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது கோவை குனியமுத்தூர் போலீசில் கடந்த 2011ல் அப்பகுதி வாலிபரை கொல்ல முயன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக அஸ்கர் அலி பெங்களூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டு, மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப்பின் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tags : Bangalore ,blast ,court ,Coimbatore , Coimbatore, Bangalore, Blast, Prisoner, Azer
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...